120 வெளிநாட்டினர்களில் 40 பேர் கைது! உரிமையாளர்களிடம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

நேற்று Brickfields உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாகக் குடியிருந்த 40 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை சம்மந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில்  சுமார் 120 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த INDIA, BANGLADESH MYANMAR, PAKISTAN, SRI LANKA நாடுகளைச் சேர்ந்த 3 வயதிலிருந்து 61 வயதுக்குற்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் தெரிவித்தனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நம்பப்படும் 10 உள்ளூர் ஆடவர்களையும் குடியிருப்புப் பகுதியின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *