அரசியலில் தனிநபர் தாக்குதல் வேண்டாம்! YB Syerleena Abdul எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கடந்த சில நாள்களாகச் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தவறானச் செய்திகளைப் பரப்பிய நபர்கள் மீது  Bukit Bendera நாடாளுமன்ற உறுப்பினர் Syerleena Abdul Rashid பினாங்கு Patani Road காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தாம் இஸ்லாத்திற்கு எதிராக மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் Communist கட்சியுடன் தொடர்புடையவராகத் தம்மை சித்தரித்துக் காணொலிகள் வெளிவந்தது தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதாக Bukit Bendera நாடாளுமன்ற உறுப்பினர் Syerleena Abdul Rashid தெரிவித்தார்.

தன்மீது அவதூறுகளைப் பரப்ப நினைத்தால் என்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். தவறாக இருந்தால் நான் என்னைத் திருத்திக் கொள்ள தயங்கமாட்டேன். ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகத் தாம் செயல்படுவதாகவும் இஸ்லாத்தின் புனிதத்தைச் சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டதாகவும் என் மீது அவதூறுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகத் தான் குரலெழுப்ப தயங்கமாட்டேன் என Bukit Bendera நாடாளுமன்ற உறுப்பினர் Syerleena Abdul Rashid எச்சரித்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *