தலைநகரில் விரைவுப் பேருந்து கவிழ்ந்தது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12-  கோலாலம்பூர், ஜலான் டூத்தாவில் விரைவுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியதில் அதன் ஓட்டுநர் உள்பட எழுவர் காயமடைந்தனர். 

தலைநகர், ஜாலான் டூத்தா டோல் சாவடிக்கு அருகே கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து
நிகழ்ந்தது. இதனை அடுத்து மஞ்சாலாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து நான்கு பேரடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்தப் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளையும்  பாதுகாப்பாக வெளியேற்றினர்.

காயமடைந்த பயணிகள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *