பாஸ் உச்சமன்ற குழுவிடமே பெரிக்காத்தான் நேஷனல் தலைமைப் பதவியின் முடிவு - தான் ஶ்ரீ ஹாடி அவாங்

top-news

மாராங், ஜன. 9-

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைமைப் பதவியை ஏற்க மாட்டேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்தப் பதவியை முன்னாள் பிரதமர் தான்ஸ்ரீ முஹியிடின் யாசின் காலியாக்கியதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பாஸ் மையக் குழு வாரத்தின் இறுதியில் கூடி முடிவெடுக்கும்.

இவ்விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஹாடி, “பாஸ் மையக் குழு இதற்கான கூட்டத்தை நடத்தி வேட்பாளரைத் தேர்வு செய்யும். ஆனால் அது நான் என்பது அவசியமில்லை. மையக் குழு தேர்ந்தெடுக்கும் எவருக்கும் உதவத் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.

முஹியிடின் யாசின் கடந்த மாத இறுதியில் PN தலைமைப் பதவியைத் துறந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது குறித்து பாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், புதிய PN தலைவர் யார் என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பாஸ் மையக் குழுவின் முடிவு இந்த வாரத்திற்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், பெரிக்காத்தான் நேஷனலின் எதிர்காலத் திசையையும், மலேசிய அரசியலில் அதன் பலத்தையும் பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *