10 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், செப் 5: சிரம்பானில், தனது பெற்றோரின் காரை ஓட்டிச் சென்ற 10 வயது சிறுவன் நேற்று ஜாலான் அரோவானா 2, தமன் அரோவானா இம்பியானில் இரண்டு வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கினான்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்ததக சிரம்பான் காவல்துறை தலைவர் ஹத்தா சே டின் தெரிவித்தார்.
அச்சிறுவன், அண்டை வீட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவனையும் உடன் அழைத்துச் சென்றதாகவும், இருப்பினும்  இருவருக்கும் எவ்வித கயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டிச் சென்ற கார் ஒரு வளைவில் செல்லும்போது சறுக்கி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.

மோதியதன் விளைவாக, வேன் அதன் முன்னால் நிறுத்தப்பட்ட மற்றொரு காரில் மோதியது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *