புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சி!
- Thinagaren Sanggaren
- 12 Aug, 2025
ஆகஸ்ட் 12.
மலேசிய குழந்தைகள் புற்றுநோய் காப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிதி திரட்டும் மெதுவோட்ட நிகழ்ச்சியில் ரி.ம 26,100 வெள்ளி திரட்டப்பட்டதாக அதன் தலைவர் லாவண்யா கணபதி தெரிவித்தார். குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியைப் பெறும் எண்ணத்தில் ஷா அலாமில் உள்ள பொட்டானிக் பூங்காவில் நிதி திரட்டலுக்கான மெதுவோட்ட நிகழ்ச்சியில் சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் இதன் மூலமாக 26,100 வெள்ளி திரட்டப்பட்டிருப்பதாகவும் லாவண்யா கணபதி தெரிவித்தார்.
OCS நிறுவனக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ரோசின் குயின் ஆதரவுடன் இந்த மெதுவோட்ட நிதி திரட்டல் நடத்தப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் இந்த நிதி திரட்டப்பட்டிருப்பதாகவும் லாவண்யா கணபதி தெரிவித்தார். திரட்டப்பட்டிருக்கும் நிதியின் மூலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கானச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என லாவண்யா கணபதி உறுதியளித்தார்.
இந்த நிதி திரட்டல்
மெதுவோட்டத்தில் சிறார்களுடன் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றிருப்பதாகவும்
அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த மரியாதைக்குரியது என்றும் லாவண்யா கணபதி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@V8fRn
555
(select 198766*667891)
555
(select 198766*667891 from DUAL)
555



