ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார்!
- Muthu Kumar
- 12 Aug, 2025
ஜோர்ஜ் டவுன். ஆக. 12-
பினாங்கு, கப்பாளா பத்தாஸ், ஜாலான் பெர்தாம் பெர்டானாவில் உள்ள தமது வளாகத்தின் முன்புறத்தில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக பறக்கவிட்டிருந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்ட வன்பொருள் கடை உரிமையாளர், போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 59
வயதான அந்நபர், நேற்று விடுவிக்கப்பட்டதாக செபெராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
10 பேரின் வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அந்நபர், போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கான உத்தரவைப் பெற நாங்கள் அவரை அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு
அழைத்துச் சென்றோம்", என்றார் அவர்.
நேற்று, ஜோர்ஜ் டவுனில் நடைபெற்ற பினாங்கு மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் புக்கிட் அமான் நிர்வாக துணை இயக்குநர், டத்தோ அஸிஸி இஸ்மாயில், அம்மாநிலத்தின் இடைக்கால போலீஸ் தலைவர், டத்தோ முஹமட் அல்வி சைனால் அபிடின் ஆகியோரின் பதவியேற்பு. ஒப்படைப்பு விழாவிற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
முறையற்ற பயன்பாட்டைத் தடுப்பதற்கான 1963ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டம், செக்ஷன் 5, 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டம், செக்ஷன் 14, 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233இன் கீழ் விசாரணை அறிக்கையை தமது தரப்பு திறந்துள்ளதாக அனுவார் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555*if(now()=sysdate(),sleep(15),0)
aiPxvpay
5550'XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z
aiPxvpay
5550"XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
aiPxvpay
(select(0)from(select(sleep(15)))v)/*'+(select(0)from(select(sleep(15)))v)+'"+(select(0)from(select(sleep(15)))v)+"*/



