சூராவ்வில் இரு பெண்களைக் கொலை செய்ய முயன்றவர் மீது இன்று குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19: பெட்டாலிங் ஜெயாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சூராவில் இரண்டு பெண்களைக் கொலை செய்ய முயன்றதாக பகுதி நேரத் தொழிலாளி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

46 வயதான ஃபிர்டாவுஸ் மஷுத், நீதிபதி நூர் ருசிலாவதி நூர் முன் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதா ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ஜாலான் SS5A/1 இல் உள்ள சூராவ் அல்-எஹ்சானியா அஹ்மதியாவின் கழிப்பறையில் இரு பெண்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கூர்மையான பொருளால் குத்தியதாக ஐந்து பிள்ளைகளின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நூர் ருசிலாவதி ஃபெர்டாஸை ஒரு உத்தரவாதத்துடன் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் RM15,000 ஜாமீன் வழங்க அனுமதித்தார். மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்!


 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *