ஜெடிதி, சிலாங்கூருக்கு இடையேயான சாரிட்டி ஷீல்ட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், மே 8-
ஜொகூர், இஸ்கண்டார் புத்திரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் அரங்கத்தில் சூப்பர் லீக் நடப்பு சாம்பியன்களுக்கும் சிலாங்கூர் எஃப்சிக்கும் இடையிலான சாரிட்டி ஷீல்ட் (பியாலா சும்பாங்சிஹ்) 2024/2025 போட்டி இந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி நடைபெறும்.
 2024/2025ஆம் ஆண்டின்  மலேசியன் லீக் (எம்-லீக்) தொடக்க ஆட்டம் சிலாங்கூர் ஆட்டக்காரரான முகமட் பைசால் அப்துல் ஹலிமுக்கு சமீபத்தில் நடந்த எரிதிராவக வீச்சு சம்பவத்தின் காரணமாக ஒத்திவைக்கப்படாது என்று மலேசியக் கால்பந்து லீக் (எம்எஃப்எல்) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்டூவர்ட் ராமலிங்கம் கூறினார்.
திட்டமிட்டபடி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்தப் போட்டியை ஒத்திவைக்க அணிகளிடமிருந்து எந்த கோரிக்கையும் மலேசியக் கால்பந்து லீக் பெறவில்லை. ஏதேனும் மாற்றம் இருந்தால் நிச்சயம் அறிவிப்போம் என்று அவர் மேலும் சொன்னார்.
ஜெடிதி தொடர்ந்து ஏழாவது முறையாக சாரிட்டி ஷீல்ட் அல்லது சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா கோப்பையை வென்று வருகிறது. 2010ஆம் ஆண்டு முதல் இந்தக் கோப்பையைப் பெற சிலாங்கூர் முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் மூன்று நாள்களுக்கு முன்பு பைசால் மீது எரிதிராவகம் வீசப்பட்டதோடு கடந்த வாரத்தில்தான் மற்றொரு தேசிய வீரரான அக்யார் ரஷீத் கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மேட்ச் மிக்சிங்-ஆல் இல்லை என்று அவர் விளக்கினார்.
இந்தச் சர்ச்சைகள் அனைத்தும் வதந்தியே. எம்- லீக்கில் ஈடுபட்டுள்ள அனைத்து அணிகளும்  விளையாட்டாளர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வதந்திகள் அனைத்தும் ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டி சுமுகமாக நடக்க பாதுகப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *