தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ

top-news
FREE WEBSITE AD


பேங்காக், மே 6- 
சிலாங்கூர் எஃப்சியின் முன்னாள் பயிற்சியாளர் டான் செங் ஹோ  தாய்லாந்து பிரிமியர் லீக்கில் (டி1)இல் தனது தற்போதைய கிளப்பான போலீஸ் டெரோ எஃப்சிக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தாய்லாந்தில் பயிற்சியாளராகப் பதவியேற்ற முதல் மலேசியர் என்பதால், தாய்லாந்தின் முதல் லீக்கான டி1இல் போலீஸ் டெரோ கிளப்பிற்கு உதவ  தாய்லாந்தில் நீண்ட காலம் தங்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர் சொன்னார்.
இந்தத் தாய்லாந்து அணியின் தரத்தை உயர்த்த பல திட்டங்கள் உள்ளது. அதனை சரிவர செய்ய நீண்ட காலம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
மலேசியாவிற்கு வெளியே தனது முதல் பணி இது என்பதால், தாய்லாந்தில் தனது நற்பெயரைக் கட்டியெழுப்ப விரும்புவதாகவும், நீண்ட காலம் அங்கு பணியாற்ற விரும்புவதாகவும் டான் கூறினார்.
டி1 கிளாப் 16 அணிகளில் 14ஆவது இடத்தில் இருந்த நேரத்தில்தான் போலீஸ் டெரோவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவர்களின் அணி சீரான நிலையில் இல்லாததும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக உள்ளதாலும் நான் அவர்களின் தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் முன்னேற்ற முயற்சிக்கிறேன் என்றார்.
 மீதமுள்ள நான்கு போட்டிகளில், லீக்கில் நிலைத்திருக்க அவர்களின் நம்பிக்கையைப் பெற குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்  என்று அவர் கூறினார்.
மூன்று ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், போலீஸ் டெரோ டானின் பதவிக் காலத்தில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, நான்கு தோல்விகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. தற்போது தாய் பிரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *