Chlorine வாயு கசிவு! மூடப்பட்ட தொழில்சாலை! மக்கள் வெளியேற்றம்!

top-news
FREE WEBSITE AD

சரவாக்கில் உள்ள ஒரு தொழில்சாலையில் பதப்படுத்தப்பட்ட klorin வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக betong மாவட்ட காற்றுமாசு கட்டுப்பாட்டு ஆணையமான HAZMAT தெரிவித்துள்ளது, சம்மந்தப்பட்ட பகுதியின் அருகிலுள்ள கிராமவாசிகளைத் தற்காலிகமாக மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 2 மணியளவில் பதப்படுத்தப்பட்ட klorin வாயு கசிந்ததாகவும் இன்று அதிகாலை வரையில் காற்றுமாசு கட்டுப்பாட்டு ஆணையமான HAZMAT அதிகாரிகள் வாயு கசிவைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதுவரையில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட பகுதிக்குள் நுழைய 14 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *