மாணவர்களின் படத்தை வீடியோவாகப் பதிவேற்றிய பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜோகூர் பாரு, செப் 6: பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தான் அழைத்துச் செல்லும் மாணவர்களை வீடியோவாகப் பதிவேற்றி, புகைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக குளுவாங், சிம்பாங் ரெங்காமில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

24 வயதான  சம்பந்தப்பட்ட உள்ளூர் இளைஞனை குளுவாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலர்கள் அதிகாலை 2.57 மணிக்கு கைது செய்ததாக ஜொகூர் காவல்துறைத் தலைவர்  எம் குமார் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கைத்தொலைபேசியும் மேலதிக விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி, பேருந்து ஓட்டுநருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்குமாறு குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (ஜேபிகேகே) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சாதாரணமாக்கப்படக்கூடாது. பெற்றோரின் அனுமதியின்றி குழந்தையின் படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வது குழந்தையின் உரிமைகள் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *