சட்டசபையில் நல்லக்கண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்; உறுப்பினர்கள் மௌன அஞ்சலி

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 19 –

தமிழக சட்டப்பேரவையில் இன்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியபோது, அவைத் தலைவர் இரு பெருமக்களின் சமூக, அரசியல் மற்றும் கலைத்துறைகளுக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து இரங்கல் குறிப்பை வாசித்தார்.

நல்லகண்ணு, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி தொடர்பான பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய தலைவராக அறியப்பட்டவர். எளிமையான வாழ்க்கை முறையாலும் நேர்மையான அரசியல் பணியாலும் அவர் பொதுமக்களின் மரியாதையைப் பெற்றிருந்தார்.

அதேவேளையில், இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட உலகில் கிராமிய கதைகளைப் புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடி இயக்குநராக போற்றப்படுகிறார். பல தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.

இருவரின் மறைவும் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களின் நினைவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *