உணவுக்கூடத்தில் கைகலப்பு, குற்றவாளிகளுக்குப் போலிஸ் வலைவீச்சு
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 9:
நேற்று அதிகாலை பண்டார் சன்வேயில் உள்ள ஒரு உணவுக்கூடத்தில் நடந்த கைகலப்பு மற்றும் கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, ஒரு குழுவினரை காவல்துறை தேடி வருகிறது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
காலை சுமார் 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமாட் கூறினார்.
சண்டை மூள்வதற்கு முன்பு, காயமடைந்த நபர்களுக்கும் அந்த இடத்தில் இருந்த ஆண்களின் குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காவல்துறை சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாகவும், சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பெற்றதாகவும் வான் அஸ்லான் கூறினார்.
ஆயுதம் அல்லது ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு கலவரம் செய்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையைப் பாதிக்கக்கூடிய வகையில், இந்தச் சம்பவம் குறித்து ஊகங்கள் செய்வதையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



