தமிழகத்தை மிரட்டும் 'ஸ்க்ரப் டைபஸ்' பாக்டீரியா! - அச்சத்தில் மக்கள்

- Muthu Kumar
- 03 Jan, 2025
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ''ஸ்க்ரப் டைபஸ்'' என்ற பாக்டீரியா தொற்று பரவி வருவதாக தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் விரிவான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
நோய்க்கான அறிகுறிகள்: 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீ
ரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், அதிக அளவில் 'ஸ்க்ரப் டைபஸ்' பரவல் உள்ளது. அதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது. விவசாயிகள் புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணி பெண்கள், பூச்சிக் கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சை முறைகள்: 'எலிசா' ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக இந்த நோயைக் கண்டறியலாம். 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சைக்கு பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளைச் செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ், 'ஸ்க்ரப் டைபஸ்' பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *