அபுதாபியில் நடிகர் ரஜினிகாந்த்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இந்த படமானது அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் ரஜினி இன்று அபுதாபிக்கு கிளம்பி சென்றிருக்கிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போல ரஜினிக்கும் லோகேஷ் மெகா ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கும் ரஜினிகாந்த் இன்று அபுதாபி சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் துபாய்க்கோ இல்லை அமெரிக்காவுக்கோ சென்று குட்டி ஓய்வு எடுக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். அதேசமயம் அமெரிக்காவுக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்துவிட்டு கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் ரஜினிகாந்த் என்று தகவல்கள் திரைத்துறையில் வலம் வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *