3 கோடி முன்பணத்திற்கு 6 கோடியாக திருப்பித் தர தயார்- நடிகர் தனுஷ்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சனைக்கு இன்று தீர்வு காணலாம் என எண்ணப்படுகிறது.

தனுஷ் முன்பணம் வாங்கிக்கொண்டு படங்களில் நடிக்காமல் இருப்பதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

தனுஷ் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் ரூ.3 கோடி முன்பணத்தை ரூ.6 கோடியாக திருப்பித் தர தயாராக இருப்பதாக நடிகர் சங்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.15 கோடி தர வேண்டுமெனக் கேட்பதாக தனுஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் தீர்வு காணவில்லை. இன்று நடைபெறும் ஆலோசனையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *