மீண்டும் போலீஸ் கேரக்டருக்கு மாறிய நடிகர் சூர்யா!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கிய தனது 46வது படத்தை தொடர்ந்து அடுத்து தனது 47வது படத்தில் நடித்து வருகிறார்.இதற்கு சூர்யா 47 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை மலையாளத்தில் ஆவேசம் என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.

இந்த படத்தை நடிகர் சூர்யா தனது ழகரம் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நஸ்லின் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பிரமோவுக்கான படப்பிடிப்பு சில தினங்களாக கேரளாவில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா போலீஸ் கெட்டப்பில் வந்து கலந்து கொண்டார். சிங்கம் படத்துக்கு பிறகு மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சூர்யா இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *