உண்மையில் இது மெய் சிலிர்க்க வைக்கிறது ரஹ்மான் சார்! - நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

top-news
FREE WEBSITE AD

தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த 26-ம் தேதி வெளியான நிலையில் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் குறித்து தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான திரைக்கதைதான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் தனுஷ். படத்தில் 'அடங்காத அசுரன்' பாடலில் வரும் 'உசுரே நீ தானே நீ தானே' என்ற வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல் காட்சியாக எப்படி இருக்கும் என்பதை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் வகையில் முக்கியமான இடத்தில் இந்த வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலித்த போது திரையரங்கே அதிர்ந்தது.

இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ராயன் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார், மேலும் தனது பதிவில் ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மலேசியாவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியில் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ள ராயன் படம் வரை தான் இசை அமைத்த பாடல்களின் பின்னணி இசைகளை கோர்த்து ஒரு கானொலியாக வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து எழுதியுள்ள நடிகர் தனுஷ், "நான், 'உசுரே நீதானே.. நீ தானே' என்ற இரண்டு வார்த்தைகளை எழுதும்போது அது இந்த அளவிற்கு ஒரு ஐகானிக் வரிகளாக மாறும் என நினைத்துப் பார்க்கவில்லை. உங்களது மெல்லிசையாலும், குரலாலும் அது மில்லியன் கணக்கான இதயங்களை வென்று ஒரு ஐகானிக் பாடலாகிவிட்டது. உண்மையில் இது மெய் சிலிர்க்க வைக்கிறது ரஹ்மான் சார்..." என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *