மாணவியிடம் பாலியல் தொந்தரவு? ஆசிரியருக்கு 6 நாட்கள் காவல்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 22-

ஜொகூரின் செரி ஆலாம் பகுதியில் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எதிர்நோக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைக்காக அவர் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செரி ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Sohaimi Ishak கூறுகையில், சந்தேக நபரான ஆசிரியர் இன்று காலை ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-ன் கீழ் போலீசார் காவல் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்ததாகவும் அவர் கூறினார்.

“சந்தேக நபரை இன்று முதல் மே 27 ஆம் தேதி வரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த காவல் அனுமதி மூலம் வழக்கின் பின்னணி, சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை மற்றும் தொடர்புடைய ஆதாரங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-ன் பிரிவு 14(a)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் உறுப்புகளைத் தவறான நோக்கத்துடன் தொடுதல் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இந்த விசாரணை நடைபெறுவதாகப் போலீசார் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *