கெர்லிங் தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ வான் அஸிஸா வருகை!

top-news


உலு சிலாங்கூர்‌ கெர்லிங்‌ தேசியவகை தமிழ்ப்பள்ளியின்‌ சீரமைப்புப்‌ பணி குறித்து முன்னாள்‌ துணைப்‌ பிரதமர்‌ டத்தோ வான்‌ அஸிஸா வான்‌ இஸ்மாயில்‌ நேரடியாக வருகை புரிந்து கண்டறிந்தார்‌.

அவருடன்‌ கல்வி அமைச்சர்‌ பட்லினா சிடேக்‌, ஓம்ஸ்‌ அறவாரியத்‌ தலைவர்‌ ஓம்ஸ்‌ பா.தியாகராஜன்‌,
கல்வி அமைச்சரின்‌ சிறப்பு அதிகாரி தியாகராஜ்‌ சங்கரநாராயணன்‌, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்‌ குணராஜ்‌ ஜோர்ஜ்‌ உள்ளிட்ட பிரமுகர்கள்‌ வருகை தந்தனர்‌.

கெர்லிங்‌ தமிழ்ப்பள்ளியின்‌ வளர்ச்சிக்கு ஓம்ஸ்‌ அறவாரியத்‌ தலைவர்‌ ஓம்ஸ்‌ பா.தியாகராஜன்‌ உள்ளிட்ட பள்ளி மேலாளர்‌ வாரியம்‌, பெற்றோர்‌ ஆசிரியர்‌ சங்கம்‌ ஆற்றிவரும்‌ பங்களிப்பு குறித்து டத்தோஸ்ரீ வான்‌ அஸிஸா   தமது பேச்சின்போது சுட்டிக்காட்டினார்‌.

ஒற்றுமை அரசாங்கம்‌ தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின்‌ வளர்ச்சிக்கு உறுதுணையாக கருக்கும்‌ என்று அவர்‌ கூறினார்‌.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Haari Murugan

good article