டெக்லான் லம்பேர்ட் ஹரிமாவ் மலாயா அணியில் இடம்பிடிப்பதில் கவனம் செலுத்துகிறார்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மே 30-
 கோலாலம்பூர் சிட்டி எஃப்சி டிஃபென்டர் டெக்லான் லம்பேர்ட் தற்போது ஹரிமாவ் மலாயா அணியில் இடம்பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
2026ஆம் ஆண்டு உலகத் தொடரின் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று அடுத்த மாதம் நடைபெறவுள்ள வேளையில்  தொடக்க வரிசையில் தனது தோற்றத்தை உறுதிப்படுத்த அவர் இலக்கு கொண்டுள்ளார்.
இருப்பினும், தேசியத் தலைமை பயிற்சியாளர் கிம் பான் கோன் தனது ஆரம்ப பட்டியலில் இருந்து தேர்வு செய்ய பல தரமான வீரர்களைக் கொண்டிருப்பதாக டெக்லான் கூறினார்.
இதில் சியாஃபிக் அஹ்மத்துக்குப் பதிலாக ஜாஃப்ரி யாஹ்யாவும்  (கோலாலம்பூர் சிட்டி எஃப்சி)  டேரனுக்குப் பதிலாக நூர் ஷமி இசுவான் அமீனும் (கூச்சிங் சிட்டி எஃப்சி) அடங்குவர்.
நான்கு போட்டிகளுக்குப் பிறகு, மலேசியா இப்போது 6 புள்ளிகளுடன் டி குழுவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், ஜூன் 6ஆம் தேதி பிஷ்கெக்கில் உள்ள டோலன் ஓமுர்சகோவ் அரங்கத்தில் மலேசிய அணி கிர்கிஸ்தானை எதிர்கொள்கிறது.
 அதற்கு முன் கடைசி இடத்தில் உள்ள தைவானை இறுதிக் குழு ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. ஜூன் 11ஆம் தேதி   கிர்கிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஓமனை எதிர்கொள்கிறது.
குரூப் டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஆசியக் கோப்பைக்கும், உலகக் கோப்பை மூன்றாவது சுற்று தகுதிச் சுற்றுக்கும் தகுதி பெறும். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *