பிடிஆர்எம் எஃப்சியை தோற்கடித்தது ஜேடிதி!

- Muthu Kumar
- 07 Feb, 2025
இஸ்கண்டார் புத்ரி, பிப்.7-
சுல்தான் இப்ராஹிம் அரங்கத்தில் பிடிஆர்எம் எஃப்சியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜொகூர் தாருல் தாஜிம் (ஜேடிடி தொடர்ந்து 11ஆவது சூப்பர் லீக் பட்டத்தை கைப்பற்ற முன்னேறியது.
ஹெக்டர் பிடோக்லியோவின் அணி 55 புள்ளிகளுடன் லீக்கில் முதலிடத்திலும், சிலாங்கூர் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருந்தாலும், சாம்பியன்ஷிப்பை உறுதிசெய்ய, அணி இந்த மாத இறுதியில் பேராக் எஃப்சிக்கு எதிராக முழுப் புள்ளிகளைச் சேகரிக்க வேண்டும். முன்னதாக, பிடிஆர்எம் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேடிதி ஆதிக்கம் செலுத்தியது.
ஜூலை 31 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள செலாயாங் நகராண்மைக் கழக அரங்கத்தில் நடந்த ஆட்டத்தின் போது நடப்பு சாம்பியன்களை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்த ஒரே அணி இதுவாகும்.
14வது நிமிடத்தில் ஸ்ட்ரைக்கர் ஜார்ஜ் லியோனார்டோ ஒப்ரெகன் ரோஜாஸ் தொடக்க கோலை அடித்தார். நடப்பு சாம்பியனான ஜேடிதி 39ஆவது நிமிடத்தில் ஜுவான் முனிஸ் காலேகோவின் கோல் 2-0 என முன்னிலைப்படுத்தியது.
இரண்டாவது பாதியில் ஜேசி ரோட்ரிக்ஸ் ரூயிஸ் 54 வது நிமிடத்தில் ஜேடிதிக்காக மூன்றாவது கோலை அடித்தார். அதே நேரத்தில் ரொமெல் ஓஸ்வால்டோ மொராலஸ் ரமிரெஸ் 81ஆவது நிமிடத்தில் இறுதி கோலை அடித்தார். ஆட்டத்தின் இறுதியில் ஆட்டம் 4-0 என முடிவடைந்தது. பி. மணியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட பிடிஆர்ளம் எஃப்சி தற்போது 18 ஆட்டங்களுக்குப் பிறகு 21 புள்ளிகளுடன் லீக்கில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *