எனக்கு பிரதமர் பதவி தேவையில்லை... குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் பாதுகாப்பாக இருந்தால்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 14: தவறான நடத்தை மற்றும் ஊழலுக்கு எதிராக
உறுதியான  நடவடிக்கை
எடுக்காவிட்டால் நாடு பாதுகாப்பான நாடாக இருக்காது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் மாண்புக்காக தகுதியைப் பார்க்காமல் குற்றவாளிகள் மற்றும்
ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியான
நடவடிக்கை எடுக்கும்படி அரச மலேசிய போலீஸ் படையை அவர்
கேட்டுக் கொண்டார். ஊழல் தொடர்பான விசாரணைகளுக்கு அதிக காலம்
எடுத்துக் கொள்வதால்  மக்கள்
அசௌகரியத்தை உணர்வதோடு,   புகாரும் செய்வதாக பிரதமர் தெரிவித்தார்.

எனினும்,  நியாயமாக விசாரணை
நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்பதை மக்கள் உணர
வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும்  பாதுகாப்பதாக இருந்தால்,
எனக்கு பிரதமர் பதவி தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 
2023 தேசிய விளையாட்டு விருதளிப்பு நிகழ்வில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் குற்றச் செயல்களுக்கு பலியாகியுள்ளதே தாம் இதனை வலியுறுத்தக் காரணம் என்றும அன்வார் கூறினார்.

விளையாட்டு வீரர்கள், அரசாங்க ஊழியர்கள் யாராக இருந்தாலும், ஊழலுகக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அவர் எச்சரித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *