கோம்பாக் கொள்ளை வழக்கு: அனைத்து சந்தேக நபர்களும் கைது

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், மார்ச் 11-

கடந்த பிப்ரவரி 27 அன்று கோம்பாக் பகுதியில் இடம்பெற்ற குழு கொள்ளை சம்பவம் தொடர்பான கடைசி இரண்டு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக தற்போது ரிமாண்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அவர்களில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒருவரான போலீஸ் உறுப்பினரும் அடங்குகின்றனர்.

மேலும் விசாரணையின் போது, இந்த குற்றச்செயலின் முக்கிய திட்டமிடுபவர் போலீஸ் அல்லாமல் பொதுமக்களில் ஒருவராக இருந்தது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“கோம்பாக் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகம் (IPD) வெற்றிகரமாக கைது செய்துள்ளது. குழுவில் இருந்த பொதுமக்களில் ஒருவரே இந்த குற்றத்தின் பிரதான திட்டமிடுபவர்,” என அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *