தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்; மக்கள் நலனைத் தொடர்ந்து பாதுகாப்போம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 7: சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒற்றுமை அரசாங்கம் மதித்து ஏற்றுக்கொள்கிறது. மக்கள் நலனைத் தொடர்ந்து  அரசு பாதுகாக்கும் என்றும்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை மடானி அரசாங்கம் மிகுந்த பணிவுடன் எடுத்துக்கொள்வதாகவும்.  மக்களின் நாடித்துடிப்பைத் தொடர்ந்து உணரவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் அதற்கான உறுதியை வலுப்படுத்தி வருவதாகவும் அவர்  கூறினார்.

சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற்ற சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தோல்வியை ஒற்றுமைக் கூட்டணி மதித்து ஏற்றுக்கொள்கிறது.

பிரதமர் என்ற முறையில், சுங்கை பக்காப் தொகுதியின் மக்கள் குரலை  மிகவும் பணிவோடு ஏற்றுக்கொள்வதாகவும்,  நாடு மடானியின் கீழ் தீவிரமாகச் செய்யப்படும் மாற்ற அலைக்கு ஏற்றவாறு அரசாங்கம் மாற்றியமைக்கும் ஒரு கட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர்,

மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து தமது அரசு முன்னெடுக்கும் என்று ஓர் அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *