அமைதி! அமைதி! - எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து
- Shan Siva
- 27 Dec, 2025
கோலாலம்பூர், டிச 27: பாஸ் தலைமையிலான பெர்லிஸில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு,அதன் மந்திரி புசார் ராஜினாமா செய்ய வழிவகுத்ததைத் தொடர்ந்து, அமைதியைக் கடைபிடிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரிகாத்தான் நேஷனல் துணைத் தலைவரான ஹம்சா, இந்த விஷயத்தை நடைமுறை ரீதியாகக் கையாள வேண்டும் என்று கூறினார்.
எந்தவொரு முடிவும் மக்கள் மற்றும் மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
புதிய மந்திரி புசாரை நியமிப்பதில் பெர்லிஸ் ராஜா மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
15வது பொதுத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப, பெர்லிஸ் அரசாங்கம் தொடர்ந்து முறையாகச் செயல்படவும், மக்களின் நலன் மற்றும் தேவைகளில் கவனம் செலுத்தவும் முடியும் என்பதை உறுதி செய்வதில் முன்னுரிமை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியலை கட்சி சமர்ப்பித்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஹம்சாவின் அறிக்கை வந்துள்ளது.
சுக்ரிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான சட்டப்பூர்வ அறிவிப்புகளை மாநில ஆட்சியாளரிடம் சமர்ப்பித்ததற்காக, பெர்சத்து சகாக்களுடன் இணைந்ததாகக் கூறப்படும் பாஸ் கட்சியின் மூன்று பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர்களை PAS தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



