மகாதீர் மகன்களுக்கான காலக்கெடு... MACC புலன்விசாரணை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்!

top-news
FREE WEBSITE AD


முன்னாள் பிரதமர் மகாதீரின் இரு மகன்களும் தங்கள் சொத்துக்களை அறிவிப்பதற்கான காலக்கெடுவை மற்றொரு சுற்று நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து, இவ்விவகாரத்தை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி புலன் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக புலன்விசாரணை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

தனக்குத் தெரிந்தவரை , இருவரும் இன்னும் தங்கள் சொத்துக்களை அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

டான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் மற்றும் அவரது சகோதரர் மிர்சான் ஆகியோர் முறையே மே 25 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *