நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத் தயாரா? - அன்வார் சவால்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 21: அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக்  கூட்டத்தில் தனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் சவால் விடுத்துள்ளார்.

இந்த பிரேரணையை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிப்பதாக அன்வார் கூறினார்.

நான் (பிரதமர் பதவியில் இருந்து) விலக வேண்டும் என்று சிலர் கோருகின்றனர்.  நம் நாட்டில் சட்டங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா?  நான் பதவி விலக வேண்டுமென நீங்கள் விரும்பினால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வையுங்கள் என்று நேற்று இரவு புக்கிட் ஜலீல், ஸ்டேடியம் ஆக்சியாட்டாவில் நடைபெற்ற பிகேஆர் கூட்டத்தில் அவர் தனது உரையில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *