இந்திய அணி T 20 கிரிக்கெட் உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது!

top-news
FREE WEBSITE AD

வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கயானாவில் நடந்த அரையிறுதியில் இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா- கோலி ஜோடி மீண்டும் சுமாரான துவக்கம் தந்தது. கோலி 9 ரன்களில் மீண்டும் ஏமாற்றினார். ரிஷாப் 4 ரன்களில் ஏமாற்றினார். இந்திய அணி 8 ஓவரில் 65/2 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக மீண்டும் ஆட்டம் துவங்கியது.

கரன் வீசிய 13வது ஓவரில் சிக்சர் அடித்த ரோகித், அரைசதம் கடந்தார். இதே ஓவரில் சூர்யகுமார், ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, 19 ரன் கிடைத்தன. ரஷித் சுழலில், ரோகித் (57) போல்டானார். சூர்யகுமார், 47 ரன் எடுத்து வீழ்ந்தார்.

ஆர்ச்சர் 18 வது ஓவரை வீசினார். இதன் முதல் 3 பந்தில் 2, 6, 6 என 14 ரன் எடுத்த பாண்ட்யா 23ரன்களும் எடுத்து 4வது பந்தில் அவுட்டானார். 5வது பந்தில் துபே 'டக்' அவுட்டானார். அக்சர் படேல் 10 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. ஜடேஜா 17 ரன்களும் அர்ஷ்தீப் 1 ரன்னிலும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணிக்கு பட்லர், பில் சால்ட் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அக்சர் தனது முதல் ஓவரில் பட்லரை 23 ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை 0 போல்டாக்கிய அக்சர், மொயீன் அலியையும்  விட்டுவைக்கவில்லை. கரன் 2ரன்கள், அபாயகரமான ஹாரி புரூக் 25 ரன்கள் என இருவரையும் குல்தீப் வெளியேற்றினார்.

ஜோர்டான் ,ரஷித்  என இருவரும் ரன் அவுட்டாகினர். கடைசியில் ஆர்ச்சர் (21) அவுட்டாக, இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி 68 ரன்னில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *