7 மாநிலங்களில் இன்று மாலை 4 மணி வரை கடும் மழை பெய்யும்! - மெட் மலேசியா அறிக்கை

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 29: ஏழு மாநிலங்களில் இன்று மாலை 4 மணி வரை பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலாக்கா மற்றும்  ஜொகூர், லங்காவி, கெடா மற்றும் பகாங்கின் ரொம்பின் ஆகிய இடங்களிலும் வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று பிற்பகல் 1 மணிக்கு ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சாராவாக்கில் சிபு (செலாங்காவ்), முக்கா (மாடு, தலாத் மற்றும் முக்கா), பிந்துலு (தடாவ் மற்றும் பிந்துலு) மற்றும் மிரி உள்ளிட்ட பல பகுதிகளையும் பாதகமான வானிலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாவில் சிப்பித்தாங் மற்றும் தவாவ்  கடும் மழைக்கும் உள்ளாகலாம் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *