காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பரவல்: பலி எண்ணிக்கை 754 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 16 Jul, 2026
கின்ஷாசா, ஜூலை 16:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 2,011 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நோய்த்தொற்றால் 754 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு உள்ளிட்ட மாகாணங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரவல் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா வைரசால் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. காங்கோவில் ஏற்பட்டுள்ள 17-ஆவது எபோலா பரவல் இதுவாகும்.
எபோலா நோய் காய்ச்சல், உடல்வலி, பலவீனம், வாந்தி மற்றும் சில நேரங்களில் உடலில் ரத்தக்கசிவு போன்ற தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பும் பயணிகள் 21 நாட்களுக்கு உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



