8 லட்சம் ரிங்கிட் பெர்சாத்து பெற்றது! – நீதிமன்றத்தில் மே பேங் அதிகாரி சாட்சியம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 13: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து பெர்சாத்து,  800,000 ரிங்கிட் பெற்றதாக சிறப்பு ஊழலுக்கான  உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கேசிஜே இன்ஜினியரிங் நிறுவனம் 2022 செப்டம்பர் 1 அன்று வங்கிக்கு இந்தப் பணத்தைச் செலுத்தியதாக மேபேங்க் ஷா ஆலம் செயல்பாட்டு அதிகாரி சாங் ஹுய் சின் கூறினார்.

சாங் தனது சாட்சிய அறிக்கையில், 2022 அக்டோபர் 31 தேதியிட்ட கேசிஜே வங்கியின் மேபேங்க் கணக்கு அறிக்கையின் அடிப்படையில் இந்த உறுதிப்படுத்தல் செய்யப்பட்டதாகக் கூறினார். அந்த அறிக்கையில், தலா 200,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு காசோலைகள் எடுக்கப்பட்டிருந்தது.

காசோலைகளில் கையொப்பங்கள் இருந்ததையும், அவை கேசிஜே இன்ஜினியரிங் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களான சுல்ஹெல்மி மைரின் @ குன்டிங் மற்றும் முகமது சைத் யூசோஃப் ஆகியோருக்குச் சொந்தமானவை என்பதையும் தாம் உறுதிப்படுத்துவதாக   அவர் கூறினார்.

ஜனா விபாவா திட்டம் தொடர்பான, நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் மூன்று பணமோசடிக் குற்றச்சாட்டுகள் உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினுக்கு எதிரான வழக்கில் சாங் சாட்சியம் அளித்து வந்தார்.

மேலும், அக்டோபர் 19, 1999 அன்று பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் கணக்குத் தொடக்கப் படிவத்தைப் பார்த்ததாகவும், அதில் டத்தோ அஸ்மான் யூசோஃப் உட்பட நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாகவும் அந்த சாட்சி உறுதிப்படுத்தினார்.

பாதுகாப்பு வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாத்தின் குறுக்கு விசாரணையின் கீழ், அந்த நான்கு காசோலைகளைப் பெற்றவர்களும் பெர்சாத்துவைச்  சேர்ந்தவர்கள் என்பதை சாங் ஒப்புக்கொண்டார்.

அனைத்து கொடுப்பனவுகளும் முறையாகப் பதிவு செய்யப்பட்டன என்றும், அந்த நான்கு பரிவர்த்தனைகளும் வெளிப்படையானவை என்றும் பாதுகாப்புத் தரப்பின் பரிந்துரையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

மார்ச் 9 அன்று, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 28 காசோலைப் பரிவர்த்தனைகள் மூலம் பெர்சாத்து நிறுவனத்தின் கணக்கிற்கு RM19.3 மில்லியன் வந்ததாகவும், இது சந்தேகத்தை எழுப்பிய்தால் மலேசிய தேசிய வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி மற்றும் நவம்பர் 2022-க்கு இடையில் கட்சியின் கணக்கில் மேலும் 6 மில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 MDB தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், நஜிப் ரசாக்கிற்குப் பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இரண்டாவது மலேசியப் பிரதமர் 79 வயதான முகைதீன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சத்து கட்சிக்காக 232.5 மில்லியன் ரிங்கிட் திரட்டுவதற்காக அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார்.

நீதிபதி நூர் ருவேனா முகமது நர்டின் முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணை ஏப்ரல் 16-ல் மீண்டும் தொடரும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *