பினாங்கிற்குத் தண்ணீர் வழங்க கெடா தயார்! - சனூசி அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 9: நிபோங் தெபாலில் வசிப்பவர்கள், குறிப்பாக சுங்கை பக்காப் பகுதியில், நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, பினாங்குக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்க கெடா அரசாங்கம் தயார் என்று பெரிகாத்தான் நேஷனல்  தேர்தல் இயக்குனர் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

லுபோ பண்டார் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கெடாவில் சுத்திகரிக்கப்பட்ட நீர் உபரியாக இருப்பதாகவும், அதை பினாங்குக்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

"நாங்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வைத்திருக்கிறோம்.  எனவே, நீங்கள் அதை வாங்க விரும்பினால், நாங்கள் அதை விற்கலாம்.  பினாங்கு சுங்கை மூடா நீர் மூலம் பினாங்கு செய்வது போல் இலவசமாக வாங்காமல் வாங்க வேண்டும்,” என்று நேற்று இரவு தொகுதியில், பெரிக்காத்தான் நேஷனல் சுங்கை பக்காப் இடைத்தேர்தல் எந்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சுங்கை மூடாவிலிருந்து கெடாவை விட இரண்டு மடங்கு தண்ணீர் எடுக்கும் பினாங்கில், போதுமான தண்ணீர் இருக்க வேண்டும் என்று  சனுசி கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராகிமும் பினாங்கைச் சேர்ந்தவர் அல்லவா?  இந்த மாநிலம் தண்ணீர் விநியோகத்தில் அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *