சிரம்பானில் பிளாஸ்டிக் நாற்காலியால் சிறுவனைத் தாக்கிய பதின்ம வயது சந்தேகநபர்கள்! - போலீஸ் தேடல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ் 22: சிரம்பானில் ஓர் உணவகக் கடைக்கு வெளியே வன்முறை மோதலில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பிளாஸ்டிக் நாற்காலியால் தாக்கிய இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்களை சிரம்பான் போலீசார் தேடி வருகின்றனர்.

41 வினாடி கொண்ட வைரல் வீடியோவில் நான்கு சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சண்டை பதிவாகியுள்ளது.  இது பாதிக்கப்பட்டவர் தரையில் துடிப்பதுபோல் காட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தரையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தபோதும், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரை மேலும் தாக்குவதுபோல் அந்த வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் பின்னர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 4.25 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கும் தெரிந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என நம்பப்படுவதாக, சிரம்பான்  மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.

தலைமறைவாக உள்ள இரு சந்தேக நபர்களையும் அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *