நீதிமன்றத்தில் சந்திப்போம்! - தக்கியுடீன் சவால்

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங், ஆகஸ்ட் 9: நெங்கிரியில் உள்ளவர்கள் உட்பட குவா மூசாங்கில் குடியேறியவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தெற்கு கிளந்தான் மேம்பாட்டு ஆணையமான Kesedar தலைவர் ஜவாவி ஒஸ்மானை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடீன் ஹாசன் கூறினார்.

ஆயிரக்கணக்கான நில மானியங்கள் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், ஆனால் இன்னும் Kesedar செயல்படுத்தவில்லை என்று இதற்கு முன்பு தக்கியுடீன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து, ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெங்கிரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு தக்கியுடீன் தனது கோரிக்கையை வாபஸ் பெறவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக ஜவாவி தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *