டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை-ஜெய்சங்கர்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை என்று என்று கத்தாரில் நடந்த டோஹா ஃபோரம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தை பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பிரிக்ஸ் நாடுகளுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு உள்ளது, முதல் முறை டிரம்ப் ஆட்சி நடந்த போதும்.. அவர்களுடன் எங்களுக்கு மிகவும் உறுதியான உறவு இருந்தது. எங்கள் இரண்டு தரப்பிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் பெரிய அளவில் மோதல் உள்ளது. டிரம்பின் கீழ் QUAD மீண்டும் தொடங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படி நாங்கள் எதையும் ஆலோசனை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்கிறது.டாலரை எதிர்க்க அல்லது துறக்க இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இப்போது பிரிக்ஸ் நாணயம் வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளோம். அதை பற்றி நாங்கள் விவாதிக்கவும் இல்லை.

BRICS நிதி பரிவர்த்தனைகள் பற்றி மட்டுமே விவாதம் செய்தோம்.அமெரிக்கா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *