தந்தையின் தியகங்களை மதிக்கிறோம்! மாமன்னர் தம்பதியரின் தந்தையர்தின வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 16: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் மாண்புமிகு ராஜா ஜரித் சோபியா ஆகியோர் இன்று முகநூலில் தங்கள் அன்பான தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

"தங்கள் குடும்பத்தை பராமரிக்க அயராது உழைக்கும் அனைத்து தந்தையர்களுக்கும், உங்கள் முயற்சிகள் மற்றும் தியாகங்களை ஆழமாக மதித்து" வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு தந்தையாக, குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில்  வகிக்கும் பொறுப்பையும் முக்கியப் பங்கையும் புரிந்துகொள்கிறோம் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னரின் தந்தை சுல்தான் இஸ்கந்தர் மற்றும் அவரது மாமனார் பாதுகா ஸ்ரீ சுல்தான் இட்ரிஸ் ஷா II ஆகியோருக்காகவும் பிரார்த்திப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *