சேரிட்டி ஷீல்ட் போட்டியில் இருந்து சிலாங்கூர் எஃப்சி விலக முடிவு!

top-news
FREE WEBSITE AD




சேரிட்டி ஷீல்ட் போட்டியில் இருந்து சிலாங்கூர் எஃப்சி விலக முடிவு!

நாளை இஸ்கந்தர் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த ஜோகூர் தாருல் தாசிம் (ஜேடிடி) அணிக்கு எதிரான சேரிட்டி ஷீல்ட் போட்டியில் இருந்து சிலாங்கூர் எஃப்சி விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான குற்றச் சம்பவங்கள் மற்றும் பல வீரர்கள், அணி அதிகாரிகளுக்கு அண்மைய காலமாகத் தொடரும் அச்சுறுத்தல்களை அடுத்து, தீவிர விவாதங்களுக்குப் பிறகு, கிளப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதைத் தாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் அனைத்து வகையான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களையும் தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அணியின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று  சிலாங்கூர் எஃப்சி நேற்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *