சிலாங்கூர் Vs திரெங்கானு - FA கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

top-news
FREE WEBSITE AD

கோல திரங்கானு, ஜூலை 16: வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சுல்தான் மிசான் ஜைனால் அபிதீன் மைதானத்தில் (SSMZA) நடைபெறவிருக்கும் திரெங்கானு எஃப்சி (டிஎஃப்சி) மற்றும் சிலாங்கூர் எப்சி அணிகளுக்கு இடையேயான எஃப்ஏ கோப்பை அரையிறுதி போட்டிக்காக மொத்தம் 351 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Azli Mohd Noor தெரிவித்தார்.

நுழைவு இடங்கள் மற்றும் ஸ்டேடியம் அருகாமையில் ஆத்திரமூட்டும் மற்றும் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் கொண்ட பதாகைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பார்வையாளர்கள் கொண்டு வரக்கூடாது என்பதற்காக கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

தடை செய்யப்பட்ட பொருட்களில் பட்டாசுகள், தீப்பொறிகள்,   ஹெல்மெட்கள், தண்ணீர் பாட்டில், கண்ணாடி பாட்டில்கள், பானம் கேன்கள், லேசர்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *