கால்பந்து வீரர் தாக்குதலுக்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD


சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் எஃப்சி கால்பந்து வீரர் பைசல் ஹலிம் மீது ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக தமது  கவலையைத் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஷாப்பிங் மாலில் பைசல் மீது ஆசிட் வீசப்பட்டதன் ,விளைவாக அவருக்கு இரண்டாம் நிலை தீக்காயம் ஏற்பட்டது.

 இதனை அடுத்து இஸ்தானா ஆலம் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், பைசலுக்கு எதிரான வன்முறைச் செயலுக்கு சுல்தான் ஷராபுதீன் கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சிலாங்கூர் எஃப்சியின் மேலாளராகவும், புரவலராகவும் இந்த ஒழுக்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 சுல்தான் ஷராஃபுதீன், காவல்துறை இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  

சிலாங்கூர் எஃப்சிக்காக தொடர்ந்து விளையாட பைசல் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும் என்று சுல்தான் ஷராபுதீன் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *