ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு டெலிகிராம்தான் சிறந்த தளமாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 6: ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு டெலிகிராம் சிறந்த தளமாக விளங்குவதாக புக்கிட் அமான் குறிப்பிட்டுள்ளது.

 

மொத்தம் 16 சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் பயன்பாடுகள் பொதுவாக மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அதில், மேலும் 1,346 வழக்குகளுடன் டெலிகிராம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றும் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

 

தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் தளங்களில் பதிவேற்றப்படும் உள்ளடக்கம், குறிப்பாக ஆன்லைன் மோசடிகளில் அதிகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று ரம்லி கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *