காலாவதியான ஹலால் லோகோவைப் பயன்படுத்தி நொறுக்குத் தீனிகள் விற்பனை! பொருள்களைக் கைப்பற்றியது KPDN

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜாம்: நொறுக்குத் தீனிகளை  விற்பனை செய்யும் நிறுவனத்தில் நேற்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) நடத்திய சோதனையைத் தொடர்ந்து, காலாவதியான மலேசிய ஹலால் லோகோவைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

 ஹலால் மேலாண்மைப் பிரிவு மற்றும் பினாங்கு இஸ்லாமிய சமய விவகாரத் துறை (JHEAIPP) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை, , தொழிற்சாலையாகப் பயன்படுத்தப்படும் இரண்டு மாடி கடைவீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

ஆய்வின் போது, ​​அவர்களின் தயாரிப்புகளின் பேக்கேஜிங்கில் காலாவதியான மலேசிய ஹலால் லோகோ பயன்படுத்தப்பட்டதைத் கண்டறிந்ததாக பினாங்கு KPDN இயக்குநர் எஸ் ஜெகன் தெரிவித்தார்.

இதையடுத்து, காலாவதியான ஹலால் லோகோ முத்திரையிடப்பட்ட RM6,748 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான  (JAKIM) அல்லது மாநில இஸ்லாமிய மத கவுன்சில் (MAIN) ஆகியவற்றின் சான்றிதழ் இல்லாமல் மலேசிய ஹலால் லோகோவைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜெகன் வணிகர்களை எச்சரித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *