சிரம்பான், லாபுவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரம் ஆன்மீகப் பெருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வேண்டுதல்!

top-news
FREE WEBSITE AD

லாபு, ஆகஸ்ட் 19: சிரம்பான், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் ஓம் சக்தி மன்றம்  23 ஆவது ஆண்டாக  ஆடிப்பூர ஆன்மீகப் பால்குட பெருவிழாவை மிக விமரிசையாக நேற்று நடத்தி முடித்தது.

அம்மன்றத் தலைவர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் இங்கு லாபு 10ஆவது மைல் ஸ்ரீ மகா   மாரியம்மன் ஆலயத்தில் மலேசிய மேல்மருவத்தூர் ஆதி ஆதிபராசக்தி அறப்பணி இயகத்தின் தேசியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் முன்னிலையில், ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் சிறப்பு வருகையோடு இப்பெருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

மேலும், ஓம்ஸ் தியாகராஜன், சா கி சின் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அம்பாளுக்கு பால் செலுத்தி தங்கள் பக்தியை நிறைவேற்றினர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தியவாறு சுமார் ஒரு கிலோமீட்டர் நடை பயணத்துடன், இங்கு ஆதிபராசக்தி நாகாம்பாளுக்கு தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து தங்கள் கரங்களால் பால் அபிஷேகத்தை நிறைவேற்றினர்.

இந்நிகழ்வில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதே வேளை பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் பஜனை கச்சேரியுடன், பக்திப் பாடல்களும் இடம்பெறவே, தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வெகுமதிகளும், வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு மன்றத்தின்  தான தர்ம திட்டத்தின் வழி அத்தியாவசியப் பொருள் உதவியோடு,  அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *