ELMINA Ridge மண் சரிவில் இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

Elmina Ridge பகுதியில் உள்ள கால்வாய் விரிவாக்கப் பணியில் இருந்த இருவர் மீது மண் சரிவு ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே இரு பணியாளர்களும் உயிரிழந்தனர். இன்று காலை 10 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் 25 வயது 30 வயது வங்காளத்தேச ஆடவர்கள் இருவர் மண் சரிவில் சிக்கியதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, சுமார் 20 நிமிடத் தேடுதலுக்குப் பின்னர் இருவரின் உடலும் சுமார் 5 மீட்டர் ஆழத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக சிலாங்கூர் மீட்புப் படை ஆணையர் Wan Md. Razali Wan Ismail தெரிவித்தார்.

காலை 11.12 க்கு ஒருவரின் சடலமும், 11.35 க்கு மற்றொருவரின் சடலமும் மீட்கப்பட்டதாகவும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் konkrit இருந்ததால் தேடுதல் பணி தாமதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கால்வாய் அமைக்கும் போது மண் சரிவு ஏற்பட்டதாக அறியப்படுகிறது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *