பப்புவா நியூ கினியாவுக்கு உதவி! - அன்வார் அறிவிப்பு

- Shan Siva
- 25 May, 2024
பப்புவா நியூ கினியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அங்குள்ள எங்கா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயாராகவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு பெருந்துயரம் என்று குறிப்பிட்ட அன்வார், மக்களின் நிலை குறித்து தாம் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மலேசியா தயாராக இருப்பதாகத் தமது முகநூல் பதிவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *