நாட்டின் அடையாளமான ஜாலூர் கெமிலாங்கை மதிப்பீர்-மக்களுக்கு நினைவுறுத்தல்!
- Muthu Kumar
- 18 Aug, 2025
புத்ராஜெயா,ஆக.18-
நாட்டின் அடையாளம் மற்றும் கண்ணியத்தின் சின்னமாக ஜாலூர் கெமிலாங்கை மதிக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் கூட்டரசு பிரதேச வணிக வளாகங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மலேசியக் கொடி. மக்களிடையே நாட்டின் மீதான அன்பை விதைக்கும் திறன் கொண்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்துள்ளார்.
எனவே, வணிக வளாகங்களும் பொது மக்களும் கொடியை ஏற்றும் போது நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக செயல்படும்படி சலிஹா அறிவுறுத்தினார்.
“நாட்டின் கௌரவத்தையும் நாட்டின் பெருமையின் சின்னத்தையும் பராமரிக்க பரிந்துரைக்கப்பட்ட படி, கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சில சம்பவங்கள் மலேசியக் கொடியை ஏற்றும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன," என்றார் அவர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற கெஅடிலான் கட்சி ஏற்பாட்டிலான மடானி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



