பள்ளிகள் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்! - கல்வி அமைச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6: : கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பான பள்ளி மேலாண்மை வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று  வெளியிட்ட ஓர் அறிக்கையில், பள்ளிகளில் சமீபத்தில் நிகழ்ந்த பல விபத்துக்கள் குறித்து கல்வி அமைச்சகம் கவலை தெரிவித்ததோடு, பள்ளிப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான அறிகுறியாக அவை இருப்பதாகவும் விவரித்துள்ளது.

அதே நேரத்தில், கல்வி நிறுவனப் பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்படுகின்றன.

பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளையும், வாகனப் பயன்பாட்டையும் மேம்படுத்துவதற்காக, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துகளையும் அமைச்சகம் கோரியுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அனைத்துப் பள்ளி நிர்வாகிகளுக்கும், குறிப்பாகப் பள்ளி வளாகங்களில் வாகனப் பயன்பாடு தொடர்பான பாதுகாப்பு விழிப்புணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்துமாறு நினைவூட்டப்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினருக்குப் பள்ளிகள் மிகவும் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பள்ளிகளில் நடந்த இரண்டு உயிரிழப்பு விபத்துகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *