இளைஞர்களுக்கு வரலாற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்த வேண்டும்! - அன்வார்
- Shan Siva
- 08 Sep, 2025
புத்ராஜெயா, செப் 9: இளைய தலைமுறையினரிடம் தேசபக்தி மற்றும் நாட்டின் மீதான அன்பை வளர்ப்பதற்காக, இளைஞர்கள் மத்தியில் வரலாற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
டிஜிட்டல்மயமாக்கல்
மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தத்தை
நோக்கி மலேசியாவின் பாதையை ஒப்புக்கொண்ட அன்வார், நாட்டின் சவால்களைச் சமாளிப்பதில் மலேசிய இளைஞர்கள் சரியான
பாதையில் செல்வதை உறுதி செய்வதற்கு வரலாற்று அறிவும் மிக முக்கியமானது என்று
கூறினார்.
மலேசிய வரலாற்றை
மிகவும் சுவாரஸ்யமாக விளக்குவதன் மூலம் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்க அதிக
முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இளைய
தலைமுறையினரிடையே வரலாற்று எழுத்தறிவை வளர்க்கும் வகையில், இந்த சவால்களை முறியடிக்கக்கூடிய ஒரு தேசிய கதையை
உருவாக்குவதே நாம் எதிர்கொள்ளும் சவால் என்று அவர் இன்று
தேசிய வரலாற்றாசிரியர்கள் மன்றத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்
அடுத்த தலைமுறை
தொழில்நுட்பம் மற்றும் வரலாறு, மொழி, கலாச்சாரம், மதம் மற்றும் மதிப்புகள் போன்ற அம்சங்களில் முழுமையான
கல்வியைப் பெறுவது முக்கியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
நமது நாட்டின்
மதிப்புகள், ஒழுக்கங்கள்
மற்றும் வரலாற்றைப் புரிந்து கொண்டால் நமது செயற்கை நுண்ணறிவு வெற்றி பெறும். நமது
வரலாறு உட்பட நமது அடையாளம் மற்றும் பலங்களைப் பாதுகாக்காமல், செயற்கை நுண்ணறிவில் மற்றவர்களை மட்டுமே நாம்
நகலெடுத்தால், நமது செயற்கை
நுண்ணறிவு வெளிப்புறக் கருத்துக்களைத் தொடர்ந்து முன்வைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



