நெங்கிரி இடைத்தேர்தல்! பாரிசான் - பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!

top-news
FREE WEBSITE AD


குவா  மூசாங்,  ஆகஸ்ட் 3: நெங்கிரி இடைத்தேர்தலில் பாரிசான் நேசனலின் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி மற்றும் பெரிகாத்தான்  நேஷனலின் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இன்று  காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல்  முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் (EC) இதை அறிவித்தது.

கடந்த  ஜூன் 13 ஆம் தேதி முகமட் அசிசி அபு நைம் பெர்சாத்துவிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 19 அம் தேதி கிளந்தான் மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லாவால் அந்த இடம் காலியானதாக அறிவித்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கிளந்தான் மாநில 15 வது தேர்தலில், முகமட் அசிஸி பாஸ் கட்சியின் கீழ் போட்டியிட்டு, பாரிசான் நேஷனல் வேட்பாளர் அப்துக் அஜிஸ் யூசோப்பை 810 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு தேதியை நிர்ணயித்துள்ளது.

நெங்கிரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் 20,245  வாக்காளர்கள் மற்றும் 14 காவலர்கள் அடங்கிய 20,259 வாக்காளர்கள் உள்ளனர்.

2004 ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறை பெரிக்காத்தான் நேஷனல் வென்றது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *